Friday, August 26, 2016

ஈராலச்சேரி - காவேரிப்பாக்கம் ஊராட்சி


வாருங்களேன்.....

Ravathanallur Village, Uttiramerur Tk. - Samana Sirpam


அன்பிற்கினிய சமண சொந்தங்கள் அனைவருக்கும்......

உத்திரமேரூர் அருகே *இராவதநல்லூர்* கிராமத்தின் *தொடக்க பள்ளி எதிரே மிக பழைமையான தீர்த்தங்கர் சிலை உள்ளது*
இக்கிராமம் உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது. தீர்த்தங்கரர் தியானத்தில் அமர்ந்த நிலையில், அசோக மரத்தோடு உள்ள இச்சிலையின் தலைக்கு மேல்புற முக்குடை சற்று உடைந்து காணப்படுகிறது. சிலையின் கீழ் பகுதியில் (லாஞ்சனம்) சிங்க முத்திரையும் சற்று சிதைந்து உள்ளது. தியானம் மேற்கொள்ளும் மகாவீரரின் இருபுறமும், சாமரம் வீசுவோர் காணப்படுகின்றனர். இச்சிலையை அங்குள்ள நற்பணி மன்றத்தினர் வழிபாடு செய்யாவிட்டாலும், பாதுகாத்து வருவதற்கு அடையாளமாக *மகாவீரர் சிலை என்று தெரியாமல்* புத்தர் சிலை என எண்ணி *புத்தர் நற்பணி மன்றம்*
என்ற பெயரில் நம் பகவான் இருப்பதை திரு.K.C. சின்னப்பா ஜெயின் மற்றும் நானும் (ராஜசேகரன்) அவ்வூர் மக்களிடம் கேட்டபோது சற்றே வருத்தம் ஏற்பட்டது .

மேலும் பேசும் போது பெரியவர் ஒருவர் இந்த ஊரின் பெயரே *இரவில் சாப்பிடாதவர்கள் வாழ்ந்த நல்ல ஊர்* மருவி நாளடைவில் *இராவத்த நல்லூர்*என மருவி விட்டது என கேட்டபோது சற்று மகிழ்ச்சியாக இருந்தது.

முந்தைய காலத்தில் சமண மக்கள், இப்பகுதியை சுற்றிலும் வாழ்ந்துள்ளதும்,
அதற்கு சான்றாகவே இச்சிலை இங்குள்ளதும்
தெரிய வந்துள்ளது. நம் முன்னோர்கள் வாழ்ந்த அவ்வூரில் உள்ள சிலையை பாதுகாக்க
இக்கிராம பொது மக்களின் ஆதரவுடன், சிலைக்கு மண்டபம் அமைத்து பாதுகாக்க ஆலோசித்து இன்று மாலை அவ்வூர் பெரியவர்களை அழைத்து பேச ஏற்பாடு செய்துள்ளோம்.

வர விருப்பம் உள்ளவர்கள் கீழ்கண்ட எண்ணில் தொடர்பு கொள்ளவும்
நன்றி
*இவண்*
*சமண இயக்கம்*
*9840596051*

ONGUR SAMANA THIRTHANKARAR

தேசிய நெடுஞ்சாலை 45 ல் உள்ள ஓங்கூர் சமண தீர்த்தங்கரர்
----------------------------------------------------------------------------
சென்னை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை எண் 45ல் ஓங்கூர் டோல்கேட் அருகில் ஒங்கூரை அடுத்துள்ள குளக்கரை சித்தர் சமாதி கோயில் அருகில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ளது ................
சற்றொப்ப 800 ஆண்டுகள் பழமையான கைவிடப்பட்ட நிலையில் உள்ள சமண தீர்த்தங்கரர் திருமேனி .........
சென்னையில் இருந்து திருச்சி மார்கத்தில் 105 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த ஓங்கூர் கிராமம் .....
வரும் 28-08-2016 ஞாயிறு காலை 10.30 மணி தொடங்கி 1 மணி வரை ஓங்கூர் கிராமத்தில் தீர்த்தங்கரர் திருமேனி அருகில் அறநிகழ்வு நடைபெறும் . பன்நெடும் காலமாய் அறம் வளர்த்த அறச்சாலையில் மீண்டும் ஓர் புத்துணர்வு நிகழ்வு பல்லாண்டுகளுக்கு பின்னர் .....
மதிய உணவு மற்றும் அறநிகழ்வுக்கு பொருள் உதவி அளித்து ஆதரவு நல்கிட்ட சென்னை இளம் தொழிலதிபர் திரு நரேந்தர் போராவுக்கு நன்றிகள் பல .......
வாய்ப்பு உள்ளோர் தவறாமல் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பிக்க வேண்டுகிறேன்
ONGUR VILLAGE which is in NH 45 Chennai - Dindukal Road just 105 kms from Chennai has a 800 years older Abondoned Theerthangar Sculpture very closer to NH 45.... It is the only Sculpture which is very nearer to National Highways in Thamizhnadu.
On Coming 28-08-2016 Sunday 10.30AM - 1 PM an awareness programme is going to be conducted in this village
Mr.NARENDAR BOHRA ,Chennai assists financially
to this programme . Our sincere thanks to him and his family members.PLEASE PARTICIPATE IN THIS FUNCTION
தகவல் : #ஸ்ரீதரன் - புதுச்சேரி / Information : #Shridharan, Puducherry.






வாருங்கள் அகிம்சை நடைக்கு......

வாருங்கள் அகிம்சை நடைக்கு......

பல்லாயிரம் ஆண்டுகள் முந்தைய  தீர்த்தங்கரர்கள் திருமேனிகளை பார்க்கவும் - அதன் வரலாற்றை அறியவும் வாருங்கள்.....

AHIMSA WALK - 33 / அகிம்சை நடை- 33

Date : 04-09-2016 Sunday / நாள் : 04-09-2016 ஞாயிறு

Meeting Point : THAPOVANAMTHIRUKKOVILUR (Viluppuram - Thirukkovilur - T.V. Malai Road)
கூடவேண்டிய இடம் : தபோவனம். திருக்கோவிலூர்.